
(முதியோர் இல்லத்தில் இருந்து உன் தந்தை எழுதுவது)
நீ பிறந்ததோ
என் மனைவியின் மீதிருந்த என் காதலால்
நான் இங்கு இருப்பதோ
உன் மனைவியின் மீதிருக்கும் உன் காதலால்
உன் வீட்டில் நாய்க்கு கிடைக்கும் இடம் கூட
உன் அப்பன் எனக்கு இல்லை
உன் மனதில் இரக்கமும் இல்லை
என் மனதில் இறக்கமும் இல்லை....
உன் கால் சட்டை நாடாவை
கட்டி விட்டுருக்கிறேன்
என் வேஷ்டியை கூட என்னால்
கட்ட முடியவில்லை இன்று
உன்னை சபிக்க மனமில்லாமல்
வாழ்த்தவே செய்கிறேன்...
உன் மகன் காலத்திலாவது இந்த
முதியோர் இல்லம் இல்லாமல் போகட்டும்...
இப்படிக்கு,
கிழிக்கப்பட்ட ஓர் உறவு
5 comments:
கண்களில் நீர்!
ஒவ்வொரு வரியிலும் உயிருள்ளது!!!
பாராட்டுக்கள் அண்ணா.
நன்றி தங்கை...
//உன் கால் சட்டை நாடாவை
கட்டி விட்டுருக்கிறேன்
என் வேஷ்டியை கூட என்னால்
கட்ட முடியவில்லை இன்று
//
This line is amazing..
The foto also tells a soga kavithai..
Publish your post in
Tamilmanam.net
Superb one...The best I've read in long time...Great going da...
Superb one...The best I've read in long time...Great going da...
Post a Comment