Wednesday, November 5, 2008

பசி தீர்ப்பதால்...

கண்ணில் கண்ணீர் துளிகள்
எனக்காக வெங்காயம் உரித்ததால்...

விரலில் வெட்டு தழும்புகள்
எனக்காக காய்கறி வெட்டியதால்...

கையில் தீப்பட்ட காயங்கள்
எனக்காக சாதம் சமைத்ததால்...

என்னவளே நீயும்
என் தாய் தான்...