Wednesday, November 5, 2008

களைப்புடன் உன் பேனா


வானத்து நட்சத்திரங்களை புள்ளிகள்
என நினைத்து கோலமிட்டிருப்பேன்
தீர்ந்திருக்காது என் மைத்துளி...

பூமத்திய கடக மகர ரேகைகளை
எண்ணிரெண்டு முறை வரைந்திருப்பேன்
உடைந்திருக்காது என் முனை...

ஏழு கடல் ஊதா நிறங்களை
நிரப்பி எழுதி வற்ற வைத்திருப்பேன்
இருந்திருக்காது என் சுமை...

உன் காதலியின் பெயரை எத்தனை
முறை எழுதுவேன் நான்…

மற்ற எழுத்துக்கள் மறந்து
களைத்து விட்டேன்...

அவள் கண்களுக்கு மையிடும்
வாய்ப்பினை ஒரு முறை கொடு

அவள் நெற்றிக்கு பொட்டிடும்
வாய்ப்பினை ஒரு முறை கொடு


புத்துயிர் பெறுவேன் நான்...

இப்படிக்கு,
களைப்புடன்
உன் பேனா...

1 comment:

Feni said...

This blog is AMAZING!!
anna, its not apt to give comments in English. Anyways, next time will download tamil fonts :)
Each poem of urs is thoughtful and well put!!
Way to go bro:)