நீ என் தோள் சாய்ந்து
தூங்கிக் கொண்டிருந்தாய்...
நான் உன்னை பற்றியே
கவலை கொண்டிருந்தேன்...
அப்போது
உன் கூந்தலினால்
என் கன்னங்களை
பரிசிக்க செய்து
ஆறுதல்படுத்தியது
ஜன்னலில் புகுந்த
தென்றல் காற்று....
என் கண்களும்
கவலை மறந்து
இமைகளை
போர்த்திக்கொண்டு
தூங்க ஆரம்பித்தன...
நன்றி
தென்றலுக்கா ??
உன் கூந்தலுக்கா ???
Monday, February 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment