நீ சிரிக்கும் போது
உன் கன்னங்களில்
விழும் குழிகளில்
மட்டுமல்ல...
நீ
சூடான பாலை
தம்ளரில் எடுத்து
அது ஆறுவதற்காக
ஊதுகிறாயே
அப்போது அந்த பாலில்
விழும் குழியிலும்
விழுந்திருக்கிறது என்
பைத்தியக்கார மனது...
Tuesday, May 12, 2009
Monday, May 11, 2009
தோற்றே விட்டேனோ ???
விழுந்தேன் எழ முடியவில்லை
தாய் உதவினாள்
தவழும் போது
விழுந்தேன் எழ முடியவில்லை
தந்தை உதவினார்
படிப்பில் தோற்ற போது
விழுந்தேன் எழ முடியவில்லை
மனைவி உதவினாள்
தொழிலில் தோற்ற போது
விழுந்தேன் எழ முடியவில்லை
கைத்தடி உதவியது
கூனி குறுகிய போது
விழுந்தேன் எழவே முடியவில்லை
மூடிவிட்டார்கள்
கல்லறைக்குள் வைத்து
வாழ்வில் நான் தோற்றே விட்டேனோ ???
Thursday, April 2, 2009
முதல் கூலி
Wednesday, February 11, 2009
நீ தரும் நினைவு
சிறு நெல்லிக்காயில்
உன் நுனி நாக்கினால்
எச்சில் வைத்து
அந்த ஈரத்தில்
உப்பினை தடவி
எனக்கு தரும் போதும்
நினைவுபடுத்துகிறாய்
என் அம்மாவையே ............
Monday, February 2, 2009
நன்றி
நீ என் தோள் சாய்ந்து
தூங்கிக் கொண்டிருந்தாய்...
நான் உன்னை பற்றியே
கவலை கொண்டிருந்தேன்...
அப்போது
உன் கூந்தலினால்
என் கன்னங்களை
பரிசிக்க செய்து
ஆறுதல்படுத்தியது
ஜன்னலில் புகுந்த
தென்றல் காற்று....
என் கண்களும்
கவலை மறந்து
இமைகளை
போர்த்திக்கொண்டு
தூங்க ஆரம்பித்தன...
நன்றி
தென்றலுக்கா ??
உன் கூந்தலுக்கா ???
தூங்கிக் கொண்டிருந்தாய்...
நான் உன்னை பற்றியே
கவலை கொண்டிருந்தேன்...
அப்போது
உன் கூந்தலினால்
என் கன்னங்களை
பரிசிக்க செய்து
ஆறுதல்படுத்தியது
ஜன்னலில் புகுந்த
தென்றல் காற்று....
என் கண்களும்
கவலை மறந்து
இமைகளை
போர்த்திக்கொண்டு
தூங்க ஆரம்பித்தன...
நன்றி
தென்றலுக்கா ??
உன் கூந்தலுக்கா ???
Subscribe to:
Posts (Atom)