உன்னை பார்க்கும் போது
இமைக்க கூட மறுக்கிறது
என் இமைகள்...
அந்த கண்ணிமைக்கும் நேரம் கூட
உன்னை காண வேண்டுமாம் என் கண்கள்...
Friday, October 24, 2008
Thursday, October 23, 2008
மீண்டும் ஒரு ஜென்மம்
உன் உள்ளே சில
காலம் வளர வேண்டும்...
உன் விரல் பிடித்து
நடை பழக வேண்டும்...
உன் கை பிடித்து
உன் பெயரை
எழுத பழக வேண்டும்...
"அம்மா" என்று
மீண்டும் ஒரு ஜென்மம்
இருந்தால்...
காலம் வளர வேண்டும்...
உன் விரல் பிடித்து
நடை பழக வேண்டும்...
உன் கை பிடித்து
உன் பெயரை
எழுத பழக வேண்டும்...
"அம்மா" என்று
மீண்டும் ஒரு ஜென்மம்
இருந்தால்...
நீ இல்லாத இந்த தனிமையில்

உன் கை மேல் என் கை வைத்து
பேசும் அந்த தினம் ஒரு நொடியை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...
என்னை பார்த்ததும் எனக்காக
இமைக்கும் அந்த உன் கண் சிமிட்டலை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...
உன் கண்களுக்கு மட்டும் நான்
அழகாய் தெரியும் அந்த உன் ரசனையை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...
புதிய ஆடை அணிந்து வந்தால்
நல்லா இருக்குடா என்ற அந்த உன் வார்த்தையை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...
சாலையை கடக்கும் போது என்
கைகளை இறுக பற்றும் அந்த உன் உணர்வை
இன்று தொலைத்து கொண்டிருக்கிறேன்...
நீ இல்லாத இந்த தனிமையில்
தொலைத்து கொண்டிருக்கிறேன் என்னையும் ....
Monday, October 6, 2008
Subscribe to:
Posts (Atom)