நீ சிரிக்கும் போது
உன் கன்னங்களில்
விழும் குழிகளில்
மட்டுமல்ல...
நீ
சூடான பாலை
தம்ளரில் எடுத்து
அது ஆறுவதற்காக
ஊதுகிறாயே
அப்போது அந்த பாலில்
விழும் குழியிலும்
விழுந்திருக்கிறது என்
பைத்தியக்கார மனது...
Tuesday, May 12, 2009
Monday, May 11, 2009
தோற்றே விட்டேனோ ???
விழுந்தேன் எழ முடியவில்லை
தாய் உதவினாள்
தவழும் போது
விழுந்தேன் எழ முடியவில்லை
தந்தை உதவினார்
படிப்பில் தோற்ற போது
விழுந்தேன் எழ முடியவில்லை
மனைவி உதவினாள்
தொழிலில் தோற்ற போது
விழுந்தேன் எழ முடியவில்லை
கைத்தடி உதவியது
கூனி குறுகிய போது
விழுந்தேன் எழவே முடியவில்லை
மூடிவிட்டார்கள்
கல்லறைக்குள் வைத்து
வாழ்வில் நான் தோற்றே விட்டேனோ ???
Subscribe to:
Posts (Atom)